Friday, December 25, 2015

vaazhvil oruthi manathil oruthi

நெஞ்சம் என்னும் தோட்டத்திலே
பருவம் பூக்கும் நேரத்திலே
வந்ததொரு காதல் அன்று
மீண்டும் அந்த தோட்டத்திலே
மற்றும் ஒரு நேரத்திலே
வந்ததொரு காதல் இன்று
என் கண்கள் இரண்டில் காணும்
கனவில் வந்தது இருவர்
இன்று அந்த கனவில் காண்பது
மற்றும் ஒருவர்

காற்றடிக்க ஒரு புறம்
கல்லடிக்க மறு புறம்
எந்த பக்கம் சாயுமோ
இந்த பழம்

அவள் வருவாள் என்பதால் உன்னை என்னுடன் வைத்திருந்தேன்  
இவள் வந்த பின்னும் என்னுடன் நீ இருப்பதேன்

போய் விடு என்று நான் சொன்னால் நீ செய்வது என்ன 

மனதின் ஆழத்தில் சென்று மடிவாயோ அல்லது 
நினைவின் நிகழ்வுகளுள் புதைந்தே கிடப்பாயோ

என் நெஞ்சை பிளக்க கத்தி தேவையே காதலிக்கும்
முன்பு
உன் கண்ணீர் துளிகளின் சக்தி போதுமே காதலித்த
பின்பு
காதல் எனபது ஒற்றை சொல் தான் உன்னை பார்க்கும்
முன்பு
காதல் யென்பது நான் உற்ற உணர்வு உன்னை பார்த்த
பின்பு