Sunday, November 13, 2016

திங்கள் இருந்தும் குளிரில்லை மனதில்
வேகும் ஊடல் நமக்குள்
பிரிந்து சென்றாய் நீ ஏனடி
கரையும் நொடிகள் பிரிவின் வலிகள்
கண்ணீர் துளிகள் துடிக்கும் இதழ்கள்
கடிந்தேன் உன்னை நான் எனவே ஒடிந்தான்
மறவேன் உன்னை நான் என்பதை நீயும்
மறக்காதே டீ

நொடி நொடியாய் நேரம் கரைய
உன்னிடம் காதல் சொல்ல நான்
தவிப்பது வெறும் வீணோ
ஒவ்வொரு இரவும் நான் கண்ட கனவெல்லாம்
கரையும் நொடியோடு கரைந்திடுமோ
கடைக் கண் பார்வை என்னை ஏமாற்றுமோ
அருகில் நானும் வரலாம் உன் கைப்
பிடித்து காதல் கூற

அதை நீ தெரிவிக்க வேண்டும் பெண்னே



Sunday, July 17, 2016

நாட்டிய நூற்றந்தாதி Naatya Nootranthaathi

புவியே நின் யாக்கை  நின் வாய்மொழி
அண்ட  பேரரவம் அருங்கலங்கள்
சூடிய பிறையும் ஒளிர் மீன்களும்
இப்பெருமை யாவும் உன்னதே அன்றோ
நல் தில்லை பிரானே நின்னை தொழுதேன்

சிந்தையில் பொதிந்தது ஓர் நல் எண்ணம்
சதங்கை பூண் பொற்பாதம் எம்பிரானார்
தம்முடையதே அவ்வடி யானும் தொழவே
சபேசன் தந்த ஆட்டம் தவமென ஆடவே

மஞ்ஞை படர்க்கொடி தத்தை வாந்தி
னநவயபெடநச சாந்தம் இடுதல்
சலம் தெளித்தல் சமய நூல் வாதம் புகழ்
இஃதியாவும் மஞ்ஞை கறியின் வநியோகம்

Monday, February 8, 2016

வாழ்க்கை என்பது உன் கண்ணாடி
அதில் நிகழ்வதெல்லாம் உன் வினைபயன்
என்னும் விம்பங்கள்.

நிகழ்வுகளுள் முக்காலங்களும் இயங்கி
கொண்டிருக்கும். நேற்று விதைத்தது
இன்று முளைத்துக்கொண்டிருக்கும்
இன்று முளைப்பது நாளைய விதைகளை
வளர்த்துகொண்டிருக்கும்.