Tuesday, March 18, 2014

தாயவள் அன்பு மகற்கு

தாயவள் அன்பு மகற்கு
புரியாது விழியன் ஈரம்
கைகள் துடைக்க மறவாது
என்றறிந்த பேதை நீ
கண்ணன் னன்பை ஊரார்
மரப்பீனும் அங்கயர் தாம்
மறந்தேனும் கோவிப்பது முறையோ
அவனிடம் இல்லை ஒரு குறையே 

அவனது கூடத்தில் மாடக்குயில்

அவனது கூடத்தில் மாடக்குயில்
தான் கண்டது கனவோ
மையிட்ட கயல் விழியாள்
கண்ணிமைத்தாள்
வெற்றிடம் கீழெங்கும் சிவக்கும்
முன் எழுந்தேன் சிற்றிடை
இளைத்திட உன்னை நினைத்தேன்
தென்றலென மெல்ல வந்தாய்
புயலென பறந்திடாதே கண்ணா !

Monday, March 10, 2014

விண்ணளந்தான் உலகம் அளந்தான்

விண்ணளந்தான்  உலகம் அளந்தான்
குமரிப் பருவத்து ஆயர் சிறுமியர்
நெஞ்சமெல்லாம் அளந்தான். வங்க
கடல் கடைந்தான் , கடைந்து முகர்ந்த
 நீரை மழையாக தரும் முகிலென
அருளினான் மாயவன் மன்னவன்
சீரிய சிங்கன் சுடராழி வலம்புரி
தரித்த நீலமேனி செவ்வாய் அழகன்
உம்பர்க்கெல்லாம்  கோமான் அன்பர்க்
எல்லாம் அடியவன் என சிறந்த
பெருமானே  வாழியே வாழியே !!

மன்னன் உருவாய் உயிராய்

மன்னன் உருவாய்  மங்கை உயிராய்
அமைத்து வாழ்வை வாழ்வாய்
உடலை பேணி உயர்வழக்கம் ஒழுகுவாய்
ஒழுகுதல் எவ்வன்னமேனில் மன்னன் உடலில்
உயிராய் வாழ்வாளே வாழியே வாழியே
என்று பெருமுழக்கமிட்டு மாலே
நீயே என்று சரணம் சொல்லு

உன் உடல் காக்கும் உயிராய் வாழ்வாளின்

 உன்  உடல் காக்கும் உயிராய் வாழ்வாளின்
குணம் கண்டு தரைமுட்டும் வான்மழை
பெருக்கெடுத்த வெள்ளம் நிலை
பணிந்து செல்லுமே மால் பனித்த
ஊழி காலத்து ஆழியும் சுழறாதே
வெண் மதிய வேதனை தீர்க்கும்
வேம்பின் நிழலாம் வாட்டும் வினை
வெம்மை தீர்க்கும் மனையாள் துணை

தூணிலும் உறைவாள் துரும்பிலும் உறைவாள்

தூணிலும் உறைவாள் துரும்பிலும் உறைவாள்
சிந்தித்த அகமெல்லாம் தித்திக்க நிறைவாள்
வாழும் நிகழ்வுகள் வாழ்வில் தருவாள்
மூப்பாலும் மரிக்காது முக்காலம்வாழ்வாள்
மூஞாலத்து   முதல்வன் தான்கொண்ட அவள்
கரம் நீட்டினாள் அனந்தன் பாதத்தில் சரணமதற்க்கு
ஒப்பு. அவள் இளங்கதிர் பார்வை மேலே பட்டால்
புழுதாகும் பெரிதான மாசெல்லாம்!

வாஞ்சை வழிந்திடும் கண்ணியாள்

வாஞ்சை வழிந்திடும் கண்ணியாள் 
வழுக்கும் மேசை மேனியாள் அவள்
பால் வண்ண விழியிற் மால் வண்ண
முழியாள்  செழித்த குழல் கற்றை
சூடியவள் பழுத்த அங்கமுடையவள்
என்றும் நீரினை பிரியாத மச்சினை
போல உன்னை பிரியாது வாழ்வாள்
நீண்ட இராக்காலம் கூடி புணர்தலின்
இன்பம் வார்ப்பாள் அவள் என்றும் வாழியே வாழியே!

வடிவிள நங்கை நப்பினாய்

வடிவிள நங்கை நப்பினாய்  வாழியே
உரியவர்க்கு உரிதான துணையே வாழியே
பெற்றவர்க்கு பெரிதான அணியே வாழியே
தத்தெடுத்தார்க்கு மாற்றான மகளே வாழியே
உற்றார்க்க்கு வற்றாத அன்புக்கேனியே வாழியே
நீ ஈன்ற மகற்கு  குன்றா விளக்கே வாழியே
யாதுமாய் நீ நின்று வழிநடத்தும்
திருபாற்க்கடல் ஆதியே நீ வாழியே

Sunday, March 9, 2014

என் மனம் ஒரு கண்ணாடி

என் மனம் ஒரு கண்ணாடி
உன் முகம் வந்து விழுந்ததடி
பார்த்ததும் நீ ஓடிவிட்டாய்
மனம் பக்கென்று ஒட்டிக்கொண்டது
நான் வாழும் காலம் வரை
உன் முகமே என் முகத்திரை
இனி யார்  சொன்னாலும்  கழற்றமாட்டேன்
யார் பார்த்தாலும் விம்பம் கட்டமாட்டேன்