Sunday, May 25, 2014

துலுக்க நாச்சியார் இயல் இரண்டு

 அரசவை
கலை மண்டபத்திலிருந்து புறப்பட்ட மன்னன் நேரே அரசவைக்கு வந்தான். அவனுக்கு  முழக்கத்துடன் ,  புகழும் வாச்கிக்கபட்டது.

மும்முடி  தேவர், கொல்லம் கொண்டான் ,
 கோ நேர் இன்மை கொண்டான் ,
ஸ்ரீ கோ மாறவன்மரான திரிபுவன சக்கரவர்த்திகள்
ஸ்ரீ குலசேகர தேவர்
வரார்! வரார்!!


தொடர்ந்து அரசவையில் என்ன நடந்தது என்பதை பின்வரும் உரையாடல் வழியே அறியலாம்.

சிம்மாசனத்தில் அமர்ந்த அரசன், அன்று வந்த தூதுவனை அழைத்து வருமாறு உத்தரவு இட்டான். உடனே காவலாலிகல் ஹோய்சால நாட்டு தூதுவனை அழைத்து வந்தனர்.

தூதுவன்: தமிழகம் மட்டுமல்லாது திராவிடம் முழுவதும் போற்றும் மாமன்னர், மாறவர்மன் குலசேகர பாண்டிய மன்னனுக்கு ஹோய்சால நாட்டு தூதுவனின் மதிப்பிற்குரிய வணக்கம்!

மன்னன்: வரவேண்டும் தூதுவனே! உங்கள் நாட்டு மன்னனும் மக்களும் நலமா?

தூதுவன்: யாவரும் நலமே

மன்னன்: மகிழ்ச்சி

பின் மன்னன் அமைச்சரை நோக்கி தகவலை அறியுமாறு ஏவினான்

இளம்பருதி: நீவிர் கொண்டு வந்த செய்தி யாதென இவ்வரசவை  அறியுமாறு உரைப்பாயாக

தூதுவன் :  நன்றி மன்னா! இவ்வரசவைக்கு கொண்டு வந்த செய்தி யாதெனில் ஹோய்சால நாட்டு மன்னரான மூன்றாம் பலாலர் இரு நாட்டிற்க்கும் இடையே நல்லுரவு அமைய, மாமன்னருடன், சிறிது காலம் தங்கி இருந்து
 நட்புரவாட விருப்பம் தெரிவித்துள்ளார். தங்கள் அழைப்பிற்காக  காத்திருக்கிறார்.

இளம்பரிதி: நட்புரவாட வருவோர் யாராயினும் அன்புடன் வரவேர்த்து விருந்தோம்பல் செய்வது தமிழர் வழக்கம். வரவேற்பதில் முரண்பாடில்லை. வரவிருக்கும் திகதி யாதென செய்தி உண்டா?

தூதுவன்: தங்களுக்கு உகந்த திகதி எதுவாயினும் அன்றே விஜயம் செய்ய சம்மதம் எனபது செய்தி அரசே!

மீண்டும் அரசர் அமைச்சரை நோக்கினார்

இளம்பருதி: நன்றி தூதுவனே! திகதி யாதென அரசருடன் அமைச்சர்கள் கலந்து ஆலோசித்த பின்னர் அறிவிக்கப்படும். அது வரையில் நீர் உமக்கென தயார் செய்யப்பட்ட அரையில் தங்கி இரு. உனக்கு தேவையான பனிவிடைகள் அறுசுவை உணவுகள் யாதும் காலம் தாழ்த்தாது வழங்கப்படும். காவலாளிகள் அவரை அழைத்து செல்லுங்கள்.

அவன் சென்ற பின்னர் அமைச்சர் உரையாடலை தொடங்கினார்

இளம்பருதி: அரசே, வீர பலாலன் தமிழகத்தையும் தனது ஆட்சிக்கு கீழ் கொண்டு வர பல முறை முயற்சி செய்து தோற்று போனவன். அவன் நட்புரவாட வருவதென்றால் சிறிது கவனம் தேவை.

மன்னன்: அதற்காக நமது நாட்டிற்க்கு வருவதை வேண்டாம்  என்று சொல்வது நமக்கு இழிவாகும்

இளம்பருதி: மாமன்னா! அவன் வருவதை வேண்டாம் என்று  கூறவில்லை, ஆனால் அவனோடு உறவாடுகையில் சிறிது கவனம் தேவை என்பதே என் கருத்து.

மன்னன்: ஒப்புகொள்கிறேன் அமைச்சரே! மட்டற்ற அமைச்சர்கள் யாரேனும் கருது வைத்திருந்தால் உடனே கூற வேண்டும் !

மற்ற அமைச்சர்கள் ஒருங்கிணைந்த குரலில் "முதலமைச்சர் கூறுவதே  எங்கள் கருத்தும். நாங்கள் அதை ஏற்கிறோம்" என்றனர்.

மன்னன்: நன்றி பெருமக்களே! இனி வீர பலாலனை வரவேற்கும் திகதியை கணித்திருந்தால் சொல்லி விடுங்கள்.

இளம்பருதி: அடுத்த திங்களுக்கு வர சொல்வது சரியாக இருக்கும் அரசே!

மன்னன்:  ஆகட்டும்! அதுவே மன்னன் முடிவென்று கூறி தூதுவனை அனுப்பி வையுங்கள்.

Sunday, May 18, 2014

துலுக்க நாச்சியார் இயல் ஒன்று

பாண்டிய நாட்டை சோழர்களிடமிருந்து மீட்டப் பின் தமிழகம் முழுவதும் பாண்டியர்களின் ஆட்சிக்கு கீழ் வந்தது. அதனை  முதலாம் சுந்தர பாண்டியனின் சிறப்பாக ஆட்சி செய்தான்,  அவனுக்கு பின் மாறவர்மன் குலசேகர பாண்டியன் நாற்பது ஆண்டுகளுக்கு சிறப்பாக ஆட்சி செய்தான். வடக்கே சாளுக்கியர்களை வீழ்த்தி ஹோய்சாளர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்தனர். அக்காலம் மூன்றாம் வீர பலால ஆண்டு கொண்டிருந்தான் அவன் தமிழகத்தையும் தனது ஆட்சிக்கு கீழ் கொண்டு வந்து விட வேண்டும் என்ற ஆசையினால் அடிக்கடி பாண்டிய நாட்டின் அரசியலில் தலையிட்டு குழப்பம் ஏற்படுத்த முயற்சித்து கொண்டிருந்தான் .பாண்டியர்கள் பொதுவாக ஒரு மன்னன் தலைநகரிலிருந்து ஆட்சி செய்ய, இளவரசர்கள் கூற்றம் என்னும் சித்ற்றரசுகளுக்கு பொறுப்பு வகித்தனர். அவ்வகையில் மூன்றாம் சுந்தர பாண்டியன் அரசனாக தலைநகரிலிருந்து ஆட்சி செய்யவும், இரண்டாம் வீர பாண்டியன் கொர்கையிளிருந்து ஆட்சி செய்யுமாறு முடிவு செய்தான் தந்தை குலசேகர பாண்டியன். இதனை துடுப்பாக எடுத்து சகோதிரர்களுக்குள்ளே  கலகம் ஏற்படுத்த காத்திருந்தான் வீர பலாளன்.

இவ்வாறென கதை தொடங்க பெறுகிறது.  அத்தியாயம் பாண்டியனின் கலை மண்டபத்தில் தொடங்குகிறது. நாம் காணவிருக்கும்  காட்சியானது, கலை மண்டபத்தில் நித்தம்  நித்தம் நடைப்பெறும் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சி.

 கலை மண்டபம் :

சிறப்பான ஆட்சி செய்யும் குலசேகரனின் அரசவையாகும். குலசேகர பாண்டியன் பல கலைகளை வளர்த்து சிறப்பு செய்து கொண்டிருந்தான். அவன் ஆட்சியில் வர்த்தகம் தலை சிறந்து விளங்கியது. சோழர்கள் கட்டி அமைத்த கோவில்கள் ஆனாலும், அதற்கும் மானியம் வழங்கி சிறப்பு செய்தான், பாண்டிய மன்னன். அவனது அவையில் நித்தமும் ஆடல் பாடல் என பல கலைஞர்கள் வந்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பரிசு பெற்று  செல்வது உண்டு. எனினும், அவன் அரசவையின் கணக்கரின் மகள்கலான நாயகி, மற்றும் ஹரிப்ரிய நித்தமும் ஆடி பாடி முடித்த  பின்னரே, மற்றவர்கள் தொடங்குவார்கள் . அவ்விதம் அவ்விருவரும் கலையில்  தேர்ச்சி பெற்றிருந்தனர் . அன்றைய தினம் ரங்கா நாயகி, முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியனை பற்றி தாண்டவ வடிவத்தில் பாடி  கொண்டிருந்தாள்,அதற்க்கு ஹரிப்ரிய அந்த உமையே தாண்டவம்  ஆடுவதை போல அடி கொண்டிருந்தாள்.  தமிழகத்தின் தலைச் சிறந்த அரசான சோழ பேரரசை நிறுவித்த இராச இராச சோழன், தமிழர்கள் தலை நிமிர்ந்து நிற்கும் வகையில் வானுயர்ந்த பெரிய கோவிலை கட்டினார். அவரின் மகனான இராசேந்திர சோழனோ  தென் இந்தியா மற்றும் வங்காளம் முழுவதும் அல்லது கடாரம், போன்ற தீவுகளையும் சொழன் பிராந்தியத்தில் சேர்த்தார். அவர்களுக்கு பின்  வந்த மன்னர்களின் திறம் சற்று  குறைய குறைய, பகையுடன் காத்திருந்த சடியவர்மன், சுந்தர பாண்டியன், சோழர்களுக்கு எதிரான  படை ஒன்றை  திரட்டி, அவர்களை வென்றான். பாண்டியர்களின்  வம்சத்தில்,சிவனுக்கு நிகராக போற்றப்படுபவர் சடையவர்மன்  என்றும்,திருமாலுக்கு இனையாக போற்றப்படுபவர் மாறவர்மன் என்றும் சிறப்பு பெயர்கள் கொண்டிருந்தனர். அவ்வகையில் சுந்தர பாண்டியன் சிவனுக்கு நிகராக போற்றப்பெற்றதால் சடையவர்மன் என்ற பெயருடன் முடிசூடப்பெற்றான். அவன் சேரர்களையும் வென்று மும்முடி பாண்டியன் என்று போற்றப்பெற்றான். அவனது மெய் கீர்தியைதான் அன்று ரங்கா நாயகி பாடி கொண்டிருந்தாள். அவள் பாடிய பாடல் பின் வருமாறு  மன்னனின் கலை மண்டபத்தில் மிக விமர்சையாக நிகழ்ந்து கொண்டிருந்தது .

போற்றி போற்றி ஈசா உன்னடி போற்றி
வெற்றி வெற்றி உன்னடி பணிந்திடும் வெற்றி

அடி வை அடி வை பகைத்தோர்  கொடி இறங்கிட வை
துருவங்கள் இரண்டிலும் மீன் கொடி பறந்திட செய்

தென்னாடுடைய சிவனே போற்றி போற்றி !!

பிறை கழற்றி சடைக் கலைந்து
தகதக  தகவென கண் சிவந்து
விறுவிறு விறுவென நான் புடைத்து
முறு முறுவென மீசை முறுக்கி

வீரத்தை வளைத்து வில்லென எடு
காற்றாய் பறந்திடும் அம்பினை தொடு
எதிர் நின்றவர் அஞ்சிட மேலதை விடு
கலி தாண்டவம் ஆடி என் அச்சத்தை சுடு

தடதட தடவென புரவிகள் புழுதினை பரப்பிட
இடிப்பட  பொடிப்பட தடைகளை தாக்கிட
முட்டிடு உருட்டிடு உருவங்கள் சிதைந்திட
மகிழ்ந்திடு நெகிழ்ந்திடு தோற்றவர் எதிர்ப்பட

தென்னாடுடைய சிவனே போற்றி போற்றி !!

இந்நிகழ்ச்சி நிகழ்ந்து கொண்டிருக்கும் வேலையில் ஒரு முக்கிய செய்தி அரசவைக்கு வருகிறது, கொண்டு வந்திருப்பவன் ஹோய்சால  நாட்டிலிருந்து வந்திருக்கும் தூதுவன்.அச்செய்தியை படித்ததும், அவசரமாக ஆலோசனை செய்ய  வேண்டும் என்று முதல் அமைச்சர் கூற, மன்னன் ஹரிப்ரியவின் ஆட்டம் முடிந்தவுடன், அவர்களின் ஆட்டத்தில்  தாம் மிகவும் மகிழ்ந்து மூழ்கிவிட்டதாக கூறி என்றும் இல்லாத அளவிற்கு  பொன்னும் பொருளும்  அல்லி வழங்கினான்.   அவளது தாண்டவ நடனத்தை  பார்க்கும் பொழுது அந்த உமையே ஆடினாலோ அல்லது சிவா பெருமானே பெண் உருக்கொண்டு ஆடினானோ என்று மெய் சிலிர்க்கும் விதம் இருந்தது  என்றான்.மேலும் ரங்கா நாயகியின் சிறப்பான பாடலினாலும் அவளது ஓங்கி ஒலித்த குரலினாலும் முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியனின் மெய் கீர்த்தி தன்னை தொட்டு பார்த்து விட்டது என்னை  வீழாதே என்றும் யார் தாலும் பணியாதே என்று அம்மாமன்னர் தன் முன் வந்து கூறியது போல இருந்தது என்றான். ஆன பொழுதும் அன்று பிற கலைஞர்களின் நிகழ்ச்சிகளை காணாமல் அரசவையை அவசரமாக கூட்டினான்.


Saturday, May 17, 2014

துலுக்க நாச்சியார்

 துலுக்க வேட்டையர்கள் பாரத கண்டம் முழுவதும் பல ஆட்சிகளை சதியால் வீழ்த்தி அதன் மூலம் பறிக்கப்பட்ட நாட்டிலிருந்த பல கோவில்களை சூறையாடினர். அங்கு நிறுவப்பட்ட இறைவனின் உருவ சிலைகலை  உடைத்தெறிந்தனர், அதோடு நில்லாது பொன் உருவங்களையெல்லாம் கொள்ளையடித்து சென்றனர். இந்த வெறி செயல்களை எல்லாம் பொறுக்காது பல பக்தர்களும், சிற்றரசர்களும் செய்வதறியாது தவித்தனர். அந்த வேட்டயர்களில் ஒருவனான அலாவுதீன் கில்ஜி பாரதம் முழுவதையும் தான் ஆட்சி செய்ய நிறைய பொருள் தேவைப்பட்டது அவ்வாறு தேவைப்பட்டதை பிற அரசுகளிடம் இருந்து கொள்ளையடித்தான் . பின் தென் திசையில் பாண்டிய நாட்டின் வளமும், பாதுகாப்பும் பற்றி அறிந்து பெரும் படியுடன் வந்து சேர்ந்தான். அவன் மதுரையை அடையும் வழியில் திருவரங்கத்தை கண்டான். அதன் பிரம்மாண்டத்தை கண்ட வியந்தவன் அதை கொள்ளையடிக்க முற்பட்டான் ஆனால் மதுரை வேந்தரை தோர்க்கடித்தால்  அது  நடக்கும் என்பதால் சுந்தர பாண்டியனோடு துவந்த யுத்தம் செய்தான். இறுதியில் சுந்தர பாண்டியன் தோர்த்து  விடவே திருவரங்கத்து கோவிலை வேட்டை ஆட தொடங்கினான்.அவன் அதன் ஏழு பிரேகாரத்தை சுற்றி வரவே மூன்று நாட்கள் ஆனது. பாண்டிய ஆட்சி விழ்ச்சி கண்டதால் வேதம் ஓதும் அந்தணர்கள் தாமே போருக்குள் இறங்கினர், சுல்தானை தடுத்து நிறுத்தினர், அவன் வருவதற்குள் கருவறையை கருங்கல்சுவற்றால் மூடி விட்டனர். ஆனாலும் உற்சவர் சிலையை சுல்தான் கைப்பற்றி டெல்லி எடுத்து சென்றான். அதை எவ்வாறு மீட்டனர் என்பது தொடரும் கதை. இதில் வரலாற்றுடன் கற்பனையாக ரங்கன் ரங்கா நாயகி ஆகிய கதை பாத்திரங்களையும், அவர்களுக்குள் இருந்த  மோதல்,காதல், அவர்கள்  இனைந்து எவ்வாறு உற்சவரை மீட்டனர் என்பது நாடகமாகும்.

 சித்தரிக்கப்பட்ட கதை பாத்திரங்கள்
மாறவர்மன் குலசேகர பாண்டியன்
மூன்றாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன்
இரண்டாம் சடையவர்மன் வீர பாண்டியன்
தலைமை அமைச்சர் இளம்பருதி
அமைச்சார் சோம்பன் சாம்பவன்
கணக்கர் விஷ்ணு மணி
கணக்கரின் மகள்கள் ரங்கா நாயகி, ஹரிப்ரிய
கதையின் நாயகன், ரங்கன்
சுல்தான் அலாவுதீன் கில்ஜி
மாலிக் கபூர்
ஹோய்சால மூன்றாம் மன்னன் வீர பலால


அத்தியாயங்கள்
1. பாண்டிய நாட்டு அரசியல் குழப்பங்கள்
2. ரங்கன், ரங்கா நாயகி காதல்
3. துலுக்கர்களின் அட்டூழியம்
4. மதுரையின் முற்றுகை
5. திருவரங்கத்து வேட்டை
6. அந்தணர்களின் போராட்டம்
7. ரங்கன் தலைமையில் யுத்தம்
8. ரங்கன் ரங்கா நாயகி உற்சவரை மீட்டல்
9. சுரதானியின்   ஏக்கம்
10. சுரதானியின் மரணம்
11. துலுக்க நாச்சியார்
12. மாலிக் கபூர் மீண்டும் படையெடுப்பு
13. தேவதாசிகள் பனி
14. இறுதியில சமாதனாம் 
15. இரு உற்சவரின் சமாதானம்

போற்றி போற்றி ஈசா உன்னடி போற்றி
வெற்றி வெற்றி உன்னடி பணிந்தது வெற்றி

அடி வை அடி வை புலிக்கொடி வில் கொடி இறங்கிட வை
துருவங்கள் இரண்டிலும் மீன் கொடி பறந்திட செய்

வீரத்தை வளைத்து வில்லென எடு
காற்றாய் பறந்திடும் அம்பினை தொடு
எதிர் நின்றவர் அஞ்சிட மேலதை விடு
கலி தாண்டவம் ஆடி ஏன் அச்சத்தை சுடு