Saturday, May 17, 2014

துலுக்க நாச்சியார்

 துலுக்க வேட்டையர்கள் பாரத கண்டம் முழுவதும் பல ஆட்சிகளை சதியால் வீழ்த்தி அதன் மூலம் பறிக்கப்பட்ட நாட்டிலிருந்த பல கோவில்களை சூறையாடினர். அங்கு நிறுவப்பட்ட இறைவனின் உருவ சிலைகலை  உடைத்தெறிந்தனர், அதோடு நில்லாது பொன் உருவங்களையெல்லாம் கொள்ளையடித்து சென்றனர். இந்த வெறி செயல்களை எல்லாம் பொறுக்காது பல பக்தர்களும், சிற்றரசர்களும் செய்வதறியாது தவித்தனர். அந்த வேட்டயர்களில் ஒருவனான அலாவுதீன் கில்ஜி பாரதம் முழுவதையும் தான் ஆட்சி செய்ய நிறைய பொருள் தேவைப்பட்டது அவ்வாறு தேவைப்பட்டதை பிற அரசுகளிடம் இருந்து கொள்ளையடித்தான் . பின் தென் திசையில் பாண்டிய நாட்டின் வளமும், பாதுகாப்பும் பற்றி அறிந்து பெரும் படியுடன் வந்து சேர்ந்தான். அவன் மதுரையை அடையும் வழியில் திருவரங்கத்தை கண்டான். அதன் பிரம்மாண்டத்தை கண்ட வியந்தவன் அதை கொள்ளையடிக்க முற்பட்டான் ஆனால் மதுரை வேந்தரை தோர்க்கடித்தால்  அது  நடக்கும் என்பதால் சுந்தர பாண்டியனோடு துவந்த யுத்தம் செய்தான். இறுதியில் சுந்தர பாண்டியன் தோர்த்து  விடவே திருவரங்கத்து கோவிலை வேட்டை ஆட தொடங்கினான்.அவன் அதன் ஏழு பிரேகாரத்தை சுற்றி வரவே மூன்று நாட்கள் ஆனது. பாண்டிய ஆட்சி விழ்ச்சி கண்டதால் வேதம் ஓதும் அந்தணர்கள் தாமே போருக்குள் இறங்கினர், சுல்தானை தடுத்து நிறுத்தினர், அவன் வருவதற்குள் கருவறையை கருங்கல்சுவற்றால் மூடி விட்டனர். ஆனாலும் உற்சவர் சிலையை சுல்தான் கைப்பற்றி டெல்லி எடுத்து சென்றான். அதை எவ்வாறு மீட்டனர் என்பது தொடரும் கதை. இதில் வரலாற்றுடன் கற்பனையாக ரங்கன் ரங்கா நாயகி ஆகிய கதை பாத்திரங்களையும், அவர்களுக்குள் இருந்த  மோதல்,காதல், அவர்கள்  இனைந்து எவ்வாறு உற்சவரை மீட்டனர் என்பது நாடகமாகும்.

 சித்தரிக்கப்பட்ட கதை பாத்திரங்கள்
மாறவர்மன் குலசேகர பாண்டியன்
மூன்றாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன்
இரண்டாம் சடையவர்மன் வீர பாண்டியன்
தலைமை அமைச்சர் இளம்பருதி
அமைச்சார் சோம்பன் சாம்பவன்
கணக்கர் விஷ்ணு மணி
கணக்கரின் மகள்கள் ரங்கா நாயகி, ஹரிப்ரிய
கதையின் நாயகன், ரங்கன்
சுல்தான் அலாவுதீன் கில்ஜி
மாலிக் கபூர்
ஹோய்சால மூன்றாம் மன்னன் வீர பலால


அத்தியாயங்கள்
1. பாண்டிய நாட்டு அரசியல் குழப்பங்கள்
2. ரங்கன், ரங்கா நாயகி காதல்
3. துலுக்கர்களின் அட்டூழியம்
4. மதுரையின் முற்றுகை
5. திருவரங்கத்து வேட்டை
6. அந்தணர்களின் போராட்டம்
7. ரங்கன் தலைமையில் யுத்தம்
8. ரங்கன் ரங்கா நாயகி உற்சவரை மீட்டல்
9. சுரதானியின்   ஏக்கம்
10. சுரதானியின் மரணம்
11. துலுக்க நாச்சியார்
12. மாலிக் கபூர் மீண்டும் படையெடுப்பு
13. தேவதாசிகள் பனி
14. இறுதியில சமாதனாம் 
15. இரு உற்சவரின் சமாதானம்

போற்றி போற்றி ஈசா உன்னடி போற்றி
வெற்றி வெற்றி உன்னடி பணிந்தது வெற்றி

அடி வை அடி வை புலிக்கொடி வில் கொடி இறங்கிட வை
துருவங்கள் இரண்டிலும் மீன் கொடி பறந்திட செய்

வீரத்தை வளைத்து வில்லென எடு
காற்றாய் பறந்திடும் அம்பினை தொடு
எதிர் நின்றவர் அஞ்சிட மேலதை விடு
கலி தாண்டவம் ஆடி ஏன் அச்சத்தை சுடு

No comments:

Post a Comment