Wednesday, July 19, 2017

இன்று பாட தோன்றியது

கண்ணில் என் கண்ணில்
நீரருவி வழிவது ஏன்
பெண்னே உன்னை தொலைத்து
நான் வாடி வருந்தியதால்
நெஞ்சத் தீவினிலே எங்கும் துன்பம்
சூழ்ந்திருக்க
காதல் ஒன்றதுவே அகமகிழ்வை
கொடுத்துதவும்
காலம் கடந்த பின்னும் காதல் வாழ்ந்திருக்கும்
மெய்க் காதல் ஒன்றே வாழ்வின் பொருளே

வந்தேன் நான் வந்தேன்
மெய்க் காதல் இன்றுணர்ந்து
கண்ணீர் உன் கண்ணில்
நான் துடைப்பேன் இதழ்க் கொண்டு
காதல் வாழ்ந்திருந்த உன் நெஞ்சத்
தீவினிலே
நானும் வாழ்ந்திருக்க துன்பம் நீந்தி
வந்தேன்
என்றும் இணைந்திருப்போம் வாழும் நாட்களெல்லாம்
சொல்லும் பொருளும் போலே ஆவோம்

Thursday, July 13, 2017

கள்வனே கண்ணா - Kalvanae Kanna

கண்ணா  கண்ணா  எதுவரை கண்ணா
கள்ள நாடகம் நீ புரிவது

கண் முன்னே உன் முகம் வந்து போகும்
ஆயினும் அருகில் நீ இல்லை
கலைந்தது கனவே விடிந்தது பொழுதோ
என்றால் அல்லும் வரவில்லை

மாலை வருவாயா என்னை
மணம் கொள்வாயா இல்லை
வராது மனம் வருத்திக் கொல்வாயா
பகலும் காத்திருந்து கழித்தேன்
இனி இரவும் வந்தது உடன்
கொல்லும் தனிமை என்னை
கொள்வது அறிந்திட மாட்டாயா

குழலூதி என் மனதை கவர்ந்தான்
என் மேய் தொழில் கெடவும் செய்தான்
அழுதேமா என்றால் என்னை முயங்கு
ஆநிரை கவர்ந்து இங்கு வருவேனென்றான்

என்னாய் புது வெண்ணெய் மனையில்
உயரே வைத்தாள் கள்ளஞ் சொல்லி
என்னை ஏவினான் தின்ன கிடைத்ததும்
உனக்கேனடி என்றே ஏங்க வைத்தான்

கள்ளவிழ் பூங்காவில் கொங்கு தேர்
வண்டுகளே கண்ணனிடம் செப்புவீரோ
பசலை உயிர் உருக்க இவள் வாடினாள்
புலம்பு அறுக்க வருவீரே என்று

கலனும் ஏந்தாது கன்றும் பருகாது
வீணே சேறாக்கும் ஆமுலை பாலன்னது
அரிவை அழகு பெருங்கடல் குடிக்கும்
மேகங்காள் கண்ணனிடம் இவை செப்புவீரோ

முள் வளர் சுரமிடை நிரை மேய்ப்போன்
எல் உள்ளளவு திரிவோன் குழல்
இசைக்கும் துளையிடை வாய்நீர்க்கும்
ஏங்கியதை நாடோடி காற்றே செப்புவீரோ

சிற்றில் சிதைத்தும் கோதை அறுத்தும்
மனங்கொள்ளன் மணம் கொள்வேனென
சொல்லுரைத்தவன் வருகைஇல் என் திசை
வரக் கண்டு கூவுவாயோ பொந்திடை குயிலே

கண்ணனே என்று வருவாயோ
இரவும் வந்தது வருத்திக்
கொல்லும் தனிமையும் தந்தது
அல்லினில் உடையே இணைப்பில்
சிறைப்படுத்த வருக பெண்ணாகம்
விழையும் வாயமுதம் தருவாயோ
மரபு முறை மணம் கொள்வாயோ

கண் முன்னே உன் முகம் வந்து போகும்
ஆயினும் அருகில் நீ இல்லை

கண்ணா  கண்ணா  எதுவரை கண்ணா
கள்ள நாடகம் நீ புரிவது