கண்ணா கண்ணா எதுவரை கண்ணா
கள்ள நாடகம் நீ புரிவது
கண் முன்னே உன் முகம் வந்து போகும்
ஆயினும் அருகில் நீ இல்லை
கலைந்தது கனவே விடிந்தது பொழுதோ
என்றால் அல்லும் வரவில்லை
மாலை வருவாயா என்னை
மணம் கொள்வாயா இல்லை
வராது மனம் வருத்திக் கொல்வாயா
பகலும் காத்திருந்து கழித்தேன்
இனி இரவும் வந்தது உடன்
கொல்லும் தனிமை என்னை
கொள்வது அறிந்திட மாட்டாயா
குழலூதி என் மனதை கவர்ந்தான்
என் மேய் தொழில் கெடவும் செய்தான்
அழுதேமா என்றால் என்னை முயங்கு
ஆநிரை கவர்ந்து இங்கு வருவேனென்றான்
என்னாய் புது வெண்ணெய் மனையில்
உயரே வைத்தாள் கள்ளஞ் சொல்லி
என்னை ஏவினான் தின்ன கிடைத்ததும்
உனக்கேனடி என்றே ஏங்க வைத்தான்
கள்ளவிழ் பூங்காவில் கொங்கு தேர்
வண்டுகளே கண்ணனிடம் செப்புவீரோ
பசலை உயிர் உருக்க இவள் வாடினாள்
புலம்பு அறுக்க வருவீரே என்று
கலனும் ஏந்தாது கன்றும் பருகாது
வீணே சேறாக்கும் ஆமுலை பாலன்னது
அரிவை அழகு பெருங்கடல் குடிக்கும்
மேகங்காள் கண்ணனிடம் இவை செப்புவீரோ
முள் வளர் சுரமிடை நிரை மேய்ப்போன்
எல் உள்ளளவு திரிவோன் குழல்
இசைக்கும் துளையிடை வாய்நீர்க்கும்
ஏங்கியதை நாடோடி காற்றே செப்புவீரோ
சிற்றில் சிதைத்தும் கோதை அறுத்தும்
மனங்கொள்ளன் மணம் கொள்வேனென
சொல்லுரைத்தவன் வருகைஇல் என் திசை
வரக் கண்டு கூவுவாயோ பொந்திடை குயிலே
கண்ணனே என்று வருவாயோ
இரவும் வந்தது வருத்திக்
கொல்லும் தனிமையும் தந்தது
அல்லினில் உடையே இணைப்பில்
சிறைப்படுத்த வருக பெண்ணாகம்
விழையும் வாயமுதம் தருவாயோ
மரபு முறை மணம் கொள்வாயோ
கண் முன்னே உன் முகம் வந்து போகும்
ஆயினும் அருகில் நீ இல்லை
கண்ணா கண்ணா எதுவரை கண்ணா
கள்ள நாடகம் நீ புரிவது
கள்ள நாடகம் நீ புரிவது
கண் முன்னே உன் முகம் வந்து போகும்
ஆயினும் அருகில் நீ இல்லை
கலைந்தது கனவே விடிந்தது பொழுதோ
என்றால் அல்லும் வரவில்லை
மாலை வருவாயா என்னை
மணம் கொள்வாயா இல்லை
வராது மனம் வருத்திக் கொல்வாயா
பகலும் காத்திருந்து கழித்தேன்
இனி இரவும் வந்தது உடன்
கொல்லும் தனிமை என்னை
கொள்வது அறிந்திட மாட்டாயா
குழலூதி என் மனதை கவர்ந்தான்
என் மேய் தொழில் கெடவும் செய்தான்
அழுதேமா என்றால் என்னை முயங்கு
ஆநிரை கவர்ந்து இங்கு வருவேனென்றான்
என்னாய் புது வெண்ணெய் மனையில்
உயரே வைத்தாள் கள்ளஞ் சொல்லி
என்னை ஏவினான் தின்ன கிடைத்ததும்
உனக்கேனடி என்றே ஏங்க வைத்தான்
கள்ளவிழ் பூங்காவில் கொங்கு தேர்
வண்டுகளே கண்ணனிடம் செப்புவீரோ
பசலை உயிர் உருக்க இவள் வாடினாள்
புலம்பு அறுக்க வருவீரே என்று
கலனும் ஏந்தாது கன்றும் பருகாது
வீணே சேறாக்கும் ஆமுலை பாலன்னது
அரிவை அழகு பெருங்கடல் குடிக்கும்
மேகங்காள் கண்ணனிடம் இவை செப்புவீரோ
முள் வளர் சுரமிடை நிரை மேய்ப்போன்
எல் உள்ளளவு திரிவோன் குழல்
இசைக்கும் துளையிடை வாய்நீர்க்கும்
ஏங்கியதை நாடோடி காற்றே செப்புவீரோ
சிற்றில் சிதைத்தும் கோதை அறுத்தும்
மனங்கொள்ளன் மணம் கொள்வேனென
சொல்லுரைத்தவன் வருகைஇல் என் திசை
வரக் கண்டு கூவுவாயோ பொந்திடை குயிலே
கண்ணனே என்று வருவாயோ
இரவும் வந்தது வருத்திக்
கொல்லும் தனிமையும் தந்தது
அல்லினில் உடையே இணைப்பில்
சிறைப்படுத்த வருக பெண்ணாகம்
விழையும் வாயமுதம் தருவாயோ
மரபு முறை மணம் கொள்வாயோ
கண் முன்னே உன் முகம் வந்து போகும்
ஆயினும் அருகில் நீ இல்லை
கண்ணா கண்ணா எதுவரை கண்ணா
கள்ள நாடகம் நீ புரிவது
No comments:
Post a Comment