ஆடித் திங்கள் பூர விண்மீன் விசும்பில்
கூடி வந்த பொன்னாளில் ஆறு ஐந்தும்
பாடித் தந்த பொன்மகள் புதூரில் வேயர்
குஉடி விட்டுச்சித்தன் மகளென உதித்தாள்
கூடி வந்த பொன்னாளில் ஆறு ஐந்தும்
பாடித் தந்த பொன்மகள் புதூரில் வேயர்
குஉடி விட்டுச்சித்தன் மகளென உதித்தாள்
பேதை முதலே கண்ணன் சிறப்பெல்லாம்
தந்தை வாய்மொழி அவளுள்ளே சேர்க்க
போதைத் தேன் சுவைத்த வண்டிவளோ
கோதை காதலால் உலகறியாது மயங்கினாள்
தந்தை வாய்மொழி அவளுள்ளே சேர்க்க
போதைத் தேன் சுவைத்த வண்டிவளோ
கோதை காதலால் உலகறியாது மயங்கினாள்
பெற்றம் மேய்த்த பிரானுக்கு எழுமையும்
உற்றோமே ஆவோம் எனக் கோதை அவள்
குற்றமில்லா பருவம் முதலே காதலால்
தேற்றமான கருத்தை அகத்தே வளர்த்தாள்
உற்றோமே ஆவோம் எனக் கோதை அவள்
குற்றமில்லா பருவம் முதலே காதலால்
தேற்றமான கருத்தை அகத்தே வளர்த்தாள்
மங்கை என வளர் கோதை மார்கழி
திங்கள் நோன்பு காத்தாள் பாவையருடனே
சங்கத் தமிழ் பாவகையுடனே நித்தம்
தங்கள் ஆயனை மாயனைப் பாடினாள்
திங்கள் நோன்பு காத்தாள் பாவையருடனே
சங்கத் தமிழ் பாவகையுடனே நித்தம்
தங்கள் ஆயனை மாயனைப் பாடினாள்
வளைந்த இமைகட்கு கீழே கூம்பின ஆம்பல்
பிறை போல் நுதல் அறல் போல் கூந்தல்
குழை பொருஞ் செவி இடை இல் திண்
முலை ஆயனுக்கே என திண்ணம் கொண்டாள்
பிறை போல் நுதல் அறல் போல் கூந்தல்
குழை பொருஞ் செவி இடை இல் திண்
முலை ஆயனுக்கே என திண்ணம் கொண்டாள்
வாரணம் ஆயிரம் சூழ நான் மறைகளோதி
தோரணம் நாட்டி பாளை கமுகு நாற
பூரணப் பொற்குடம் வைத்து தண் பந்தலிட்டு
நாரணன் மணங்கொள்ள கனவுக் கண்டாள்
தோரணம் நாட்டி பாளை கமுகு நாற
பூரணப் பொற்குடம் வைத்து தண் பந்தலிட்டு
நாரணன் மணங்கொள்ள கனவுக் கண்டாள்