எவ்வழி என்பா் சென்றதோ அறியோம்
யாதும் அறிவாய் காற்றே! அவா்தம்
புகலிடம் புகுவாய் பசலை பூத்த
திடமென் வேய்தோள் தேயுறத்
தீதாற்றும் என்னிலை சென்றுரை விரைந்தே!
கேளாய் தோழி! நெருநை தொழூஉ துவர்நிறத்து
கொலை ஏறுகோடுக் காணினும் அஞ்சான் பாய்ந்துதன்
கைஇருக் கொண்டு இமில் தழீஇய அப்பொதுவன்
கங்குல் கனவில் நாணவந்தான் சுணங்கு அணி
முலைஇமில் எனவோ தழீஇ எயிற்று
ஊறும் அமிழ்துண்டு களித்தானடி நல்லாய் மகனவன்
கேளாய் தோழி நெருநை நடந்ததுவோ
பணிசெய் அம்மனையில் கணினி அகத்து
நிரல்புக்கி நானோ நைந்ததனால் சற்றே
தேநீர்பருகி அயர்வற சென்றேனா அவனும்
வந்தான் கண்டேனா கங்குலுள்
கனவில் என்னிதழ்நீர் குடித்தானடி என்செய்கேன்