Monday, November 17, 2014

கவிதையின் அழகு சின்ன சின்ன பொய்கள்

கவிதையின் அழகு சின்ன சின்ன பொய்கள்
பெண்ணே உன் அழகு விழிகள் பேசும் மெய்கள்

உதடு என்றும்  பொய் சொல்லும் போதும்
விழிகள் சொல்லும் மெய் அழகு சேர்க்கும்

கண்ணாலே பார்த்தேன் கண்ணை பறிக்கும் அழகை
காதாலே கேட்டேன் நெஞ்சில் இனிக்கும் உன் பாட்டை

கண்ணை பறிக்கும் இந்த அழகு உன்னிடம்
மொத்தம் விழுங்க சொல்லி ஆசை என்னிடம்