Sunday, July 27, 2014

துலுக்க நாச்சியார் இயல் நான்கு - thulakka nachiaar iyal four

முன்னுரையாக நாம் கதை மாந்தர்களையும் கதைக்கான காரணத்தையும், வரலாற்று சுவடுகலையும் கண்டு வந்ததால் காண தவறியதை இனி காண்போம், மதுரையின் எழிலையும், அரசவியின் அமைப்பு, கோட்டை அமைப்பு, ரங்கா நாயகியின் அழகிய வனப்பு மற்றும் ரங்கனின் திறனும் ரங்கா நாயகியை பற்றி புகழ் உரைப்பதும் என பல் வேறு நிகழ்வுகளை காணப் போகிறோம். இனி அதையெல்லாம் கண்டு களிப்போம். முதலில்  மதுரையை பற்றியும் அங்கு தங்கி இருக்கும் ஒற்றனாலும் வர விருக்கும்  கேடென்ன எனபது பற்றி காண்போம்

இரு கோட்டை சுவர்களைக் கொண்டு கம்பீரமாக விளங்கியது பாண்டிய நாடு. அரசரின் அரண்மனையை சுற்றிலும் பெரும் அகழிகளும் பலத்த கவல்களும் இருந்தன. மறுபுறம் பெரிய நந்தவனமும் எழில்மிகு சிற்ப வேலைபாடுகளும் சேர்ந்து மிக பரந்த அரண்மனையின் அழகை மேம்படுத்திக்  கொண்டு திகழ்ந்தது. அரண்மனையின் அகண்ட இடம், இன்னும் பல கலை வேலைபாடுகளை உண்ண துடித்து வாய் திறந்தே காத்திருந்தது. அங்கு தினமும் பல முக்கியமான வியாபாரிகளும் செல்வந்தர்களும் வந்து போவதாய் இருந்தாலும் எளிய மக்கள் மற்றும் புலவர்களும் வந்து சென்ற வண்ணம் இருந்தது. அவரவர் குறைகளையும், விண்ணபங்களையும் கூறி நிவர்த்தி செய்து கொண்டனர். மன்னர் குலசேகர பாண்டியனின் ஆட்சியில் எளிய குடிமக்களின் குறையை தீர்க்கவே பெரும் அமைப்புகள் அமைக்கப்பட்டு நிர்வகிக்கபட்டன. அவர்களின்  முறையானது கீழ்வருமாறு

பாண்டியனின் அரசவை ஐம்பெருங்குழுவாக பிரிக்கப்பட்டது. அவை யாதெனில் மாசனம், பார்ப்பார்,  மருத்தர், நிமித்தர், அமைச்சர். அரசனின் சேவையில் மேலும் எட்டு நபர்கள் நியமிக்கபட்டனர் . அவர்கள் எண்பேராயம் என வழங்கப்பட்டனர்.

மன்னன் தனது நாட்டை கூற்றங்கலாக பிரித்து ஒவ்வொரு கூற்றத்திற்கும் ஒரு ஆளுநரை நியமித்தான். பொதுவாக இரு இளவரசர்கள் இருந்தால், மூத்தவர் மன்னராக, தலைநகரிலிருந்து செய்ய மற்றவர் ஒரு கூற்றத்திலிருந்து ஆட்சி செய்வார். ஒவ்வொரு கூற்றமும் மண்டலங்களாக பிரிக்கப்பட்டன, ஒவ்வொரு மண்டலமும் நாடு என பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு நாட்டில் உள்ள கிராமங்கள் ஊர் என வகுத்து, ஒவ்வொரு ஊரின் உட்பிரிவுகள் சேரி என வழங்கப்பட்டன. ஊர்களின் ஆட்சி அங்குள்ள வயது முதியவரும் அறிவில் சிறந்தவருமாக இருப்பவரிடம் கொடுக்கப்பட்டது. இரு  அமைப்புகள் ஊர்களை ஆட்சி செய்தன. அவை மன்றம் மற்றும் அம்பலம். மன்றம் என்பது ஒரு சிறியஅமைப்பு, ஏதேனும் மரத்தின் கீழ் அமைக்கபெரும். அம்பலம் என்பது பெரிய அளவிலான அமைப்பு. அதற்க்கென  தனி கட்டிடம் உண்டு. இவை இரண்டும் ஊர்களின் பொது பிரச்சனைகளை தீர்த்து வைப்பதோடு அரசாணையினை ஊருக்கு அறிவிப்பது நிலா ஆய்வு போன்ற வேலைகளை செய்தது. வரி வசூலிப்பது போன்றவை தனி அதிகாரிகளால் வசூலிக்கப்ட்டது.

இவை நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. காரணம் ஏனென்றால் நமது முன்னோர் கொண்ட ஆட்சி திறன், பாரதத்தின் பல இடங்களில் நாகரீகம் வளரும் முன்பே, தமிழர் ஆட்சி, அரசியல் இவைகளில் திறம் பெற தேர்ச்சி பெற்றவர் என்பதை பறைசாற்ற பட வேண்டும். மேலும் இக்கதையின் சில நிகழ்வுகளை  புரிந்து கொள்ள தேவை படும்.

இவ்வாறென பல போகங்கள் நிறைந்து இருந்தாலும், நாட்டிலும் அரச குடும்பத்திலும் சஞ்சலங்கள் இருக்கவே செய்தன. நாட்டில் இன்னும் சாதி வேறுபாடுகள் அதிகமாக துளிர் விட்டன. தேவதாசி முறையும் கடைபிடிக்க பட்டு வந்தது. தேவதாசிகள் இறைவனுக்காக வளர்க்கப்பட்டவர்கள். அவர்களை தேவர் அடிகளார் என்றும் அழைப்பர். இந்த வழிமுறை தான் பின்பு
தாசியாட்டம் என மருவ பட்டது அதற்க்கு காரணம் நமது தமிழ் மன்னர்களின்
ஆட்சி வீழ்ந்து அயலார் கைகளில் சிக்கிய பின் பல நூற்றாண்டுகளாய் சிதைக்கப்பட்டது . செல்வந்தர்களின் சுகத்துக்காக மாற்றி இயற்றப்பட்டது.அப்படி ஒரு தேவதாசியிடம் தான் பிரியா நாட்டியம் பயின்றாள்.  அங்கே அவளுக்கு உற்ற தோழி ஒருத்தியும் இருந்தாள். இருவரும் இணைந்தே நடனம் பயின்றனர்.  பாவத்திலும், அழகிலும், ஆட்டத்திலும் ஒருவருக்கொருவர் சலிதவரில்லை.

தமிழர்களுக்கு இடையே அவ்வப்பொழுது ஒற்றுமை குன்றியும் மிஞ்சியும் இருந்து வந்ததுள்ளது. முன்பு சோழ, சேர, பாண்டியர்களாய் பிரிந்து இருந்து போர் செய்தனர். இடையில் ஒரு நூற்றாண்டிற்கு மேல் ஒற்றுமை காத்தனர். மறுபடியும் சோழர் உயர்ந்தும் பாண்டியர் மறைந்தும், இப்பொழுது பாண்டியர் உயர்ந்தும் சோழர் மறித்தும் சேரர் ஒதுங்கியும் வாழ்கின்றனர். ஆயினும் மக்களிடையே ஓரின உணர்வு இருக்கவே செய்தது.

மேற்கண்டது நாட்டின் நிலையே. அரசவையை நோக்கி கவனிப்போம். ஒற்றன் சென்ற பிறகு அரசர் தமது இளவரசர்களை சந்திக்க நினைத்து அவர்களை அழைத்திருந்தார். பாட சாலையில் பயிற்சி பெற்று வரும் அவர்களும்  வந்து சேர்ந்தனர்.   மன்னர் காலை விடிந்தவுடன் அரசவையைக் கூட்டி தான் முக்கிய முடிவு எடுக்கப் போவதாகவும் பட்டம் சூடப் போகும் காரியம் என்றும் கூறி தனது அமைச்சர்களை அழைத்தார். இளவரசர்கள் வழக்கம் போல் போரபயிற்சிகள் மற்றும் இதர கலைப்பயிர்சிகள், அரச தந்திரம் முதலியவற்றை பயின்று அவரவருக்கான அந்தவனத்தில் தேவதாசிகளின் நடனங்களை கண்டு கொண்டிருந்தனர்.

இருவரும் ஒருவரையொருவர் நன்கு புரிந்தவர்கள் ஒற்றுமையுடன் வளர்ந்தவர்கள். மூத்தவன் பலத்த வீரனாக இருந்தாலும் விவேகத்தில் இளையவனை விட சற்றே தளைத்தவன். இந்த  தகவல் அரண்மனையில் உள்ள வீரர்களுக்கும் தெரிந்ததே. அவர்கள் இது பற்றி அடிக்கடி பேசிக்கொள்ளவும் செய்தனர். ஒற்றன்  விடுதிக்கருகில் இருந்த காவலர்களும்
இதைப்பற்றி பேசிக் கொண்டிருப்பதை ஹோய்சால தூதன் கேட்டுக் கொண்டான். தன மன்னர் தம்மை இங்கு அனுப்பியது எதற்காகவோ அந்த தகவலை உறுதியாக அறிந்து கொண்டான்.  இவர்களைப் பற்றி அரசர் அறிந்திருந்ததால் பட்டத்தை சூட்டுவது  என்பது பற்றி ஆலோசிக்கவே அரசவையை கூட்டியிருந்தார். அங்கு வழக்கம் போல மூத்தவருக்கு என்று ஒரு கட்சியும் இளையவருக்கென்று ஒரு கட்சியும் இருந்தது.

அரசர் பேச்சை ஆரம்பித்து, "நான் அமைச்சர் பெருமக்களை வரச் சொல்லியதின் காரணத்தை அனைவரும் அறிந்திருப்பீர். எனினும் நானே உரைக்கிறேன். நம் இரு இளவரசர்களில் பட்டத்துக்கு தகுதியானவர் யார் என்பது பற்றி தங்கள் கருத்தை கூறுங்கள்". அவர்கள் கூறியது தான் தாமதம், ஆயத்தமாய் இருந்த மூத்தவரின் கட்சி ஒருமித்தமாக தன் வாக்கை அளித்தது. அரசர் தான் எதிர்பார்த்தது போல் நடக்கவே, புன்னகையுடன், இருவரின் தனிச் சிறப்புகள் தனித்தனியே எடுத்து கூறுங்கள்". என்றார்.

Saturday, July 26, 2014

மனம் என்னும் மதகை உடைத்து

மனம் என்னும் மதகை உடைத்து
காதல் என்னும் காட்டாறு  கரை
புரண்டு  ஓடுதடி
நீந்த தெரியாமல் மீள முடியாமல்
தவிக்கிறேன் நானடி
அக்கரையில் நீயும் செல்வதைக் கண்டேன்


Sunday, July 20, 2014

சிற்றிடையில் நூலாடை செருகி

சிற்றிடையில் நூலாடை செருகி
நடையிட பிண்ணிடும் சடைகுழலென
செந்தாள் வரை  மூடி மேலெழும்பி
வளைக் கொண்ட தென்னை உடலைச்
சுற்றி அம்மேல் முதிர்ந்த கனி  அழகை
மூடியிட்டு கருங்கூந்தலொடு இயைந்து
கீழ் விழும் பொழுது பட்டுச் சேலையே !!
நீ பொன்வான எழிலிடுப்பை மூடாது
பார்த்த என் மனதை தீயில் இட்டு
வதைத்தாய். வெளிப்பட்ட வதனம்
வெறியினை ஊட்ட மூடியிட்ட அங்கம்
முள் என நெருட மனம் என்னும் மதகை
உடைத்து காதல் என்னும் காட்டாறு
கரைபுரண்டு ஓடுதடி நீந்த தெரியாமல்
மீள முடியாமல் தவிக்கிறேன் நானடி

Monday, July 7, 2014

துலுக்க நாச்சியார் இயல் மூன்று - Thulakka nachiaar iyal moondru

ரங்க நாயகியின் இல்லம், மதுரையின் சுந்தரேஸ்வரர் கோவிலின் கிழக்கு மாட வீதியில் அமைந்துள்ளது. அது ஒரு விசாலமான பரபரப்பான சாலையாகும். அங்கு ரங்கா நாயகியின் இல்லம் என்றால் அறியாதவர் இருப்பது அரிதாகும். ஆட்டம் முடித்து அன்று மதியமே இருவரும் கலை மண்டபத்தை விட்டு புறப்பட்டனர். அவர்கள் மாலை நேரம் வருமுன் வீடு வந்து அடைந்தனர். வரும் வழியில் தந்தை மகிழ்ச்சியுடன் தன் இரு மகள்களிடமும் பேச தொடங்கினார்.  "நாயகி நீ இன்று வெகு சிறப்பாக பாடினாயே, உனக்கு எங்கிருந்து இவ்வளவு தீரம் வந்தது அதிலும் ஒரு தாண்டவத்திற்கு ஏற்ற தலைப்பையும் பாடலையும் நீங்கள் இருவரும் வெகு சிறப்பாக அமைத்து விட்டீர்கள்". பணிவாக ரங்கா நாயகி கூறினால், ஏதும் பெரிதான ஒன்றை செய்துவிடவில்லை. நம் மன்னரின் கீர்த்தியை என்றாவது இப்படி பாட வேண்டும் என்று ஆசைப்பட்டோம், பாடிவிட்டோம். அது மட்டும் இல்லை தாங்கள் மற்றும், நம் சுற்றத்தார் அனைவரின் ஆசியும் இருப்பதால், மேலும் சிறப்பாக அமைந்தது. நன்று மகளே, எங்கள் ஆசி உனக்கு என்றும் உண்டு, வரும் காலங்களில் நீ அறிய சாதனைகளை வேண்டும். சாதனைகளை   விட உன்னத சேவை செய்தால் போதும் தந்தையே! இவ்வாறு பேசிக்கொண்டே அவர்கள் வீட்டிற்க்கு வந்து சேர்ந்தனர்.
கலைஞர்கள் என்றால் போட்டியும் பொறாமையும் தேடி வரும் உற்றார் ஆகிவிடும். அதற்கேற்ப அங்கு மற்றொரு பாடகியும் இருந்தால், அவன் தான் சிந்தாமணி. அவளும் கலையில் ரங்கா நாயகிக்கு குறைந்தவள் இல்லை, ஆயினும் தன்னை விட அவள் பெயர் புகழீட்டுவதை சகித்து கொள்ளாது  தவிப்பவள். அவர்கள் இருவருக்கும் இடையே மனப்புழுக்கம் நாளுக்கு நாள் பெருகியது. ரங்கா நாயகி, சிந்தாமணியை பற்றி யாரிடமும்  புறம்பு கூறுவதுமில்லை , என்றாலும், அவளை தனக்கு போட்டியாகவே கருதி வந்தால். சிந்தாமணியும் ரங்கா நாயகி பற்றி யார் பேச கேட்டாலும் முகத்தை  திருப்பிக்கொண்டு போய் விடுவாள்.

இவ்வாறிருக்க, அவர்களை தங்கள் வீடு வந்து சேர்ந்ததும், அவர்களின் தாய் மகிழ்ச்சியுடன் உள்ளே வரவேற்றாள். வாருங்கள் வாருங்கள்,  இன்று தங்களை பற்றி தான் அனைவரும் பேசிக் கொண்டிருகின்றனர். பெருமிதம் கொள்கிறேன் உங்களை நினைத்து. தந்தையும் பாராட்டை மீண்டும் தொடர காத்திருந்தவர் போலும், ஆமாம் ஆமாம் அசதி விட்டனர், இவர்கள்  இருவரும். இவர்களை பற்றி தான் இந்த ஊரே மெச்சி கொள்கிறது. இவ்வாறு இருக்கையில் அங்கு அந்தணர் நால்வர் வந்து அழைகின்றனர். யாரது? உள்ளே வாருங்கள் என்றார் மணி. உள்ளே வந்தவர்களை கண்டு ஆற தழுவி, வாருங்கள் பட்டரே வாருங்கள் என்றார். ஆம்! வந்தவர் அழகர் கோவிலின் பட்டரே ஆவர். உற்சவ காலம் நிகழ்வதால், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலைஞர்களை அழைத்து நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். அன்று மாலை நடக்க இருக்கும் கருட வாகனம் மிக பிரசதியான ஒன்று, அதற்க்கு மேலும் சிறப்பூட்ட  நாயகியின் கச்சேரியை அமைக்க முடிவுச் செய்தனர்.

நேற்று சிந்தாமணியின் நிகழ்ச்சி நிகழ்ந்தது. அவள் மிக சிறப்பாக பாடிவிட்டால். அதனால் எனவோ, கூட்டம் இன்று அதிக அளவில் திரண்டு வந்துள்ளனர். அது மட்டுமில்லாது நீங்கள் அரசரின் பாராட்டை பெற்றதையும் அனைவரும் அறிந்திருப்பதால், எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது. ஆகவே உங்களை இன்று பாட வருமாறு அழைக்க வந்தோம்! என்றார் பட்டர். தனக்கு  முன்பு சிந்தாமணி பாடிவிட்டால் என்பதும்  நாயகிக்கு சிறிது மன குமைச்சல் தந்தாலும், இறையடியாரின் கோரிக்கை என்பதாலும், தான் அவளை விட சிறப்பாக பாடிக் காட்ட வேண்டும் என்ற துடிப்பிலும் பாட ஒப்புக்கொண்டாள். மாலை நெருங்கிவிட்டது அவளும் தன்னை தயார் படுத்திக் கொண்டு, தனக்கென ஏற்பாடு செய்யப்பட்ட, புரவி வாகனத்தில் ஏறி புறப்பட்டாள். தன் மகளின் சிறப்பை காண பெற்றோரும், தன் தமக்கையின் சிறப்பை காண ப்ரியாவும் புறப்பட்டனர். விழ ஆரம்பித்தது, ரங்கா நாயகிக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்து மேடைக்கு அழைத்தனர். பட்டர் கள்ளழகரை புகழ்ந்து பாசுரங்கள்  பாடிய பிறகு, அவர் அருளால் பாட வந்திருக்கும் ரங்கா நாயகியையும் புகழ்ந்து விட்டு நிகழ்ச்சியை தொடங்குமாறு அறிவித்தார். விழாவிற்கு தலைமை தாங்கி வந்திருந்தார், அமைச்சர் இளம்பருதி. ரங்கா நாயகியும் பாட ஆரம்பித்தால், அவள் பாடிய பாடலானது பின் வருமாறு.

விண் அளந்தான் உலகம் அளந்தான்
குமரி பருவ ஆயர் சிறுமியர்
நெஞ்சமெல்லாம் அளந்தான் வங்க
கடல் கடைந்தான் கடைந்து முகர்ந்த
நீரை மழையாக தரும் மேகமென
அருளினான் மாயவன் மன்னவன்
சீரிய சிங்கன் சுடராழி வலம்புரி
தரித்த நீலமேனி செவ்வாய் அழகன்
உம்பர்க்கெல்லாம் கோமான் அன்பர்க்
கெல்லாம் அடியவன் என சிறந்த
பெருமானே  வாழியே வாழியே!

 அவளின் குரளின்பதை ரசித்தவன் அவளின் முகப்பொலிவையும் பார்த்து வியந்து  போனான். அவளை சற்று அருகே கண்டு களிக்க கூட்டத்தை கலைத்துக் கொண்டு முன் செல்ல முயன்றான். பூர்ண சந்திரன் போன்ற பொலிவுடன், தோன்றினாள்  அவளது  பெரிய நெற்றியும் அதில் சூடிய சுட்டியும் அழகிய பொட்டும் தழைத்த கூந்தலில் நிறைந்து சூடிய மல்லிகைப்
பூவும் மனம் கவர்ந்தது.

அனால் முன்வரிசையில் உட்கார அனுமதியில்லாததால், அவனை அரண்மனை காவல் ஆட்கள் அப்புற படுத்த, அவனை பிடித்து இழுத்தனர். ஆனாலும் வைத்த  கண் மாறாமல்  அவளைப் பார்த்தபடியே  நகர்ந்தான். கூடத்தில் நடந்த சலசலப்பை கவனித்த  ரங்க நாயகி பாட்டில் கவனித்து இருந்தாலும் நடந்த சலசலப்பையும் கவனித்தாள். அவர்கள் ரங்கனை இழுத்து செல்வதையும் அவன் தன்னையே உற்று பார்ப்பதையும் கவனித்த ரங்க நாயகி வெட்க புன்னகையுடன் பாட்டை தொடர்ந்தாள். தன்னை நோக்கி அவள் புன்னகை செய்வதை என்னி  ரங்கனும் தனக்குள் சிரித்துக் கொண்டே நகர்ந்தான்.

முற்றும்