Sunday, July 20, 2014

சிற்றிடையில் நூலாடை செருகி

சிற்றிடையில் நூலாடை செருகி
நடையிட பிண்ணிடும் சடைகுழலென
செந்தாள் வரை  மூடி மேலெழும்பி
வளைக் கொண்ட தென்னை உடலைச்
சுற்றி அம்மேல் முதிர்ந்த கனி  அழகை
மூடியிட்டு கருங்கூந்தலொடு இயைந்து
கீழ் விழும் பொழுது பட்டுச் சேலையே !!
நீ பொன்வான எழிலிடுப்பை மூடாது
பார்த்த என் மனதை தீயில் இட்டு
வதைத்தாய். வெளிப்பட்ட வதனம்
வெறியினை ஊட்ட மூடியிட்ட அங்கம்
முள் என நெருட மனம் என்னும் மதகை
உடைத்து காதல் என்னும் காட்டாறு
கரைபுரண்டு ஓடுதடி நீந்த தெரியாமல்
மீள முடியாமல் தவிக்கிறேன் நானடி

No comments:

Post a Comment