Monday, July 7, 2014

துலுக்க நாச்சியார் இயல் மூன்று - Thulakka nachiaar iyal moondru

ரங்க நாயகியின் இல்லம், மதுரையின் சுந்தரேஸ்வரர் கோவிலின் கிழக்கு மாட வீதியில் அமைந்துள்ளது. அது ஒரு விசாலமான பரபரப்பான சாலையாகும். அங்கு ரங்கா நாயகியின் இல்லம் என்றால் அறியாதவர் இருப்பது அரிதாகும். ஆட்டம் முடித்து அன்று மதியமே இருவரும் கலை மண்டபத்தை விட்டு புறப்பட்டனர். அவர்கள் மாலை நேரம் வருமுன் வீடு வந்து அடைந்தனர். வரும் வழியில் தந்தை மகிழ்ச்சியுடன் தன் இரு மகள்களிடமும் பேச தொடங்கினார்.  "நாயகி நீ இன்று வெகு சிறப்பாக பாடினாயே, உனக்கு எங்கிருந்து இவ்வளவு தீரம் வந்தது அதிலும் ஒரு தாண்டவத்திற்கு ஏற்ற தலைப்பையும் பாடலையும் நீங்கள் இருவரும் வெகு சிறப்பாக அமைத்து விட்டீர்கள்". பணிவாக ரங்கா நாயகி கூறினால், ஏதும் பெரிதான ஒன்றை செய்துவிடவில்லை. நம் மன்னரின் கீர்த்தியை என்றாவது இப்படி பாட வேண்டும் என்று ஆசைப்பட்டோம், பாடிவிட்டோம். அது மட்டும் இல்லை தாங்கள் மற்றும், நம் சுற்றத்தார் அனைவரின் ஆசியும் இருப்பதால், மேலும் சிறப்பாக அமைந்தது. நன்று மகளே, எங்கள் ஆசி உனக்கு என்றும் உண்டு, வரும் காலங்களில் நீ அறிய சாதனைகளை வேண்டும். சாதனைகளை   விட உன்னத சேவை செய்தால் போதும் தந்தையே! இவ்வாறு பேசிக்கொண்டே அவர்கள் வீட்டிற்க்கு வந்து சேர்ந்தனர்.
கலைஞர்கள் என்றால் போட்டியும் பொறாமையும் தேடி வரும் உற்றார் ஆகிவிடும். அதற்கேற்ப அங்கு மற்றொரு பாடகியும் இருந்தால், அவன் தான் சிந்தாமணி. அவளும் கலையில் ரங்கா நாயகிக்கு குறைந்தவள் இல்லை, ஆயினும் தன்னை விட அவள் பெயர் புகழீட்டுவதை சகித்து கொள்ளாது  தவிப்பவள். அவர்கள் இருவருக்கும் இடையே மனப்புழுக்கம் நாளுக்கு நாள் பெருகியது. ரங்கா நாயகி, சிந்தாமணியை பற்றி யாரிடமும்  புறம்பு கூறுவதுமில்லை , என்றாலும், அவளை தனக்கு போட்டியாகவே கருதி வந்தால். சிந்தாமணியும் ரங்கா நாயகி பற்றி யார் பேச கேட்டாலும் முகத்தை  திருப்பிக்கொண்டு போய் விடுவாள்.

இவ்வாறிருக்க, அவர்களை தங்கள் வீடு வந்து சேர்ந்ததும், அவர்களின் தாய் மகிழ்ச்சியுடன் உள்ளே வரவேற்றாள். வாருங்கள் வாருங்கள்,  இன்று தங்களை பற்றி தான் அனைவரும் பேசிக் கொண்டிருகின்றனர். பெருமிதம் கொள்கிறேன் உங்களை நினைத்து. தந்தையும் பாராட்டை மீண்டும் தொடர காத்திருந்தவர் போலும், ஆமாம் ஆமாம் அசதி விட்டனர், இவர்கள்  இருவரும். இவர்களை பற்றி தான் இந்த ஊரே மெச்சி கொள்கிறது. இவ்வாறு இருக்கையில் அங்கு அந்தணர் நால்வர் வந்து அழைகின்றனர். யாரது? உள்ளே வாருங்கள் என்றார் மணி. உள்ளே வந்தவர்களை கண்டு ஆற தழுவி, வாருங்கள் பட்டரே வாருங்கள் என்றார். ஆம்! வந்தவர் அழகர் கோவிலின் பட்டரே ஆவர். உற்சவ காலம் நிகழ்வதால், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலைஞர்களை அழைத்து நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். அன்று மாலை நடக்க இருக்கும் கருட வாகனம் மிக பிரசதியான ஒன்று, அதற்க்கு மேலும் சிறப்பூட்ட  நாயகியின் கச்சேரியை அமைக்க முடிவுச் செய்தனர்.

நேற்று சிந்தாமணியின் நிகழ்ச்சி நிகழ்ந்தது. அவள் மிக சிறப்பாக பாடிவிட்டால். அதனால் எனவோ, கூட்டம் இன்று அதிக அளவில் திரண்டு வந்துள்ளனர். அது மட்டுமில்லாது நீங்கள் அரசரின் பாராட்டை பெற்றதையும் அனைவரும் அறிந்திருப்பதால், எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது. ஆகவே உங்களை இன்று பாட வருமாறு அழைக்க வந்தோம்! என்றார் பட்டர். தனக்கு  முன்பு சிந்தாமணி பாடிவிட்டால் என்பதும்  நாயகிக்கு சிறிது மன குமைச்சல் தந்தாலும், இறையடியாரின் கோரிக்கை என்பதாலும், தான் அவளை விட சிறப்பாக பாடிக் காட்ட வேண்டும் என்ற துடிப்பிலும் பாட ஒப்புக்கொண்டாள். மாலை நெருங்கிவிட்டது அவளும் தன்னை தயார் படுத்திக் கொண்டு, தனக்கென ஏற்பாடு செய்யப்பட்ட, புரவி வாகனத்தில் ஏறி புறப்பட்டாள். தன் மகளின் சிறப்பை காண பெற்றோரும், தன் தமக்கையின் சிறப்பை காண ப்ரியாவும் புறப்பட்டனர். விழ ஆரம்பித்தது, ரங்கா நாயகிக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்து மேடைக்கு அழைத்தனர். பட்டர் கள்ளழகரை புகழ்ந்து பாசுரங்கள்  பாடிய பிறகு, அவர் அருளால் பாட வந்திருக்கும் ரங்கா நாயகியையும் புகழ்ந்து விட்டு நிகழ்ச்சியை தொடங்குமாறு அறிவித்தார். விழாவிற்கு தலைமை தாங்கி வந்திருந்தார், அமைச்சர் இளம்பருதி. ரங்கா நாயகியும் பாட ஆரம்பித்தால், அவள் பாடிய பாடலானது பின் வருமாறு.

விண் அளந்தான் உலகம் அளந்தான்
குமரி பருவ ஆயர் சிறுமியர்
நெஞ்சமெல்லாம் அளந்தான் வங்க
கடல் கடைந்தான் கடைந்து முகர்ந்த
நீரை மழையாக தரும் மேகமென
அருளினான் மாயவன் மன்னவன்
சீரிய சிங்கன் சுடராழி வலம்புரி
தரித்த நீலமேனி செவ்வாய் அழகன்
உம்பர்க்கெல்லாம் கோமான் அன்பர்க்
கெல்லாம் அடியவன் என சிறந்த
பெருமானே  வாழியே வாழியே!

 அவளின் குரளின்பதை ரசித்தவன் அவளின் முகப்பொலிவையும் பார்த்து வியந்து  போனான். அவளை சற்று அருகே கண்டு களிக்க கூட்டத்தை கலைத்துக் கொண்டு முன் செல்ல முயன்றான். பூர்ண சந்திரன் போன்ற பொலிவுடன், தோன்றினாள்  அவளது  பெரிய நெற்றியும் அதில் சூடிய சுட்டியும் அழகிய பொட்டும் தழைத்த கூந்தலில் நிறைந்து சூடிய மல்லிகைப்
பூவும் மனம் கவர்ந்தது.

அனால் முன்வரிசையில் உட்கார அனுமதியில்லாததால், அவனை அரண்மனை காவல் ஆட்கள் அப்புற படுத்த, அவனை பிடித்து இழுத்தனர். ஆனாலும் வைத்த  கண் மாறாமல்  அவளைப் பார்த்தபடியே  நகர்ந்தான். கூடத்தில் நடந்த சலசலப்பை கவனித்த  ரங்க நாயகி பாட்டில் கவனித்து இருந்தாலும் நடந்த சலசலப்பையும் கவனித்தாள். அவர்கள் ரங்கனை இழுத்து செல்வதையும் அவன் தன்னையே உற்று பார்ப்பதையும் கவனித்த ரங்க நாயகி வெட்க புன்னகையுடன் பாட்டை தொடர்ந்தாள். தன்னை நோக்கி அவள் புன்னகை செய்வதை என்னி  ரங்கனும் தனக்குள் சிரித்துக் கொண்டே நகர்ந்தான்.

முற்றும்

No comments:

Post a Comment