Monday, March 5, 2018

asamyukta hastha viniyoga

சர்பசீர்ஷம்

சுழன்றுசாந்த மிழைத்தலும் அரவும் உழையும்
மங்களநீர்ச் சென்னியில் தெளித்தலும் ஊட்டமும்
இயவுட்கு நீரளித்தலும் தோள்தழுவும் மகிழ்ந அன்பும்
களிற்றின் தலையும் மற்போரிட கைவலி காட்டவும்
ஆகும் அரவுச்சென்னி பயன்களாம்.

பத்மகோஷ

கூவிளம் கொக்கு விளாம் முதலாக் கனிகளும்
முகையும் மலர்மழையும் அலர்க் கொத்தும்
தாமரை செம்பருத்தி முதலா மலர்களும்
கலமும் அதில் நல்லுணவும் ,முட்டையும்
கொங்கையும் வட்டப் பந்தும் புற்றும்
சுழலாட்டமும் மணிகளும் இவை ஆகும்
தாமரை மொட்டின் பயன்களாம்