பகல் அன்றி இரவும் அன்றி இடையே
பொழுதொன்று அகமன்றி புறமுமன்றி
இடையினிற் இடனொன்று நரனன்றி
கொல் விலங்கன்றி எவர் உண்டு
எஃகு உருக்கி செய்பொருள் அல்ல
இடையினிற் இடனொன்று நரனன்றி
கொல் விலங்கன்றி எவர் உண்டு
எஃகு உருக்கி செய்பொருள் அல்ல
எமை கொல்வான் எதைக் கொள்வான்
செரு தொடுத்த அவுணன் என் திறனொழிய
செரு தொடுக்க பெருமாள் எவன் உள்ளான்
அகம் அல்ல இல் புறமும் அல்ல
எவ்விடம் நின்று என்னை வெல்வான்
அறியா பாலன் விளிக் கேட்டும்
விழிக் கொள்ளா நாரணன் என்றான்
அரி உள்ளான் விழிக் கொள்வான் புவி
அறிய அறம் ஓங்க அவன் வருவான்
தூணிலும் துமியினிலும் இருப்பான்
மதிகெட்டார் மருள் நீக்கும் நாரணன்
வருவானோ எம்முன் நகைக் கூட்டம்
செய்தான் என்னை வெல்வதோர் வழி
அறிந்திலர் நரனும் உம்பரும் பேழ் அரியும்
எவர் குறித்தும் கிலி அறியேனென்றான்
வருவானோ எம்முன் நகைக் கூட்டம்
செய்தான் என்னை வெல்வதோர் வழி
அறிந்திலர் நரனும் உம்பரும் பேழ் அரியும்
எவர் குறித்தும் கிலி அறியேனென்றான்
எங்கும் உள்ளான் என்றும் உள்ளான்
ஊழின் திரை காட்ட முற்படா எனினும்
ஞாலம் போற்றும் அரியென மொழிதல்
யாரினும் வலியவன் அவனென உணர்வீர்
சாதலற்று வாழ பேறு பெற்றேன் யான்
எண் திசை மறவரும் அஞ்ச வென்றேன்
ஞாலம் போற்றும் எஞ்ஞான்றும் எம்மை
யான் என்றும் போற்றிலேன் அரியை
எண் திசை மறவரும் அஞ்ச வென்றேன்
ஞாலம் போற்றும் எஞ்ஞான்றும் எம்மை
யான் என்றும் போற்றிலேன் அரியை
ஆசையறு அதன் பயன் சா ஐயமறும்
பணி செய் மேலோர்க்கு பணிந்து செய்
எப்பேறும் எஞ்ஞான்றும் அரியிடம் ஈந்திடு
இங்கனம் வாழ் மேலோர் உய்வரே
இன்றே வரச் சொல் இங்கு வரச் சொல்
துஞ்ச துணிவுக் கொள் அரியை எம்முன்
இருக் கைகள் தோமர படை வீசி
தூண் கோடிடித்து விளித்தான் தன் கூற்றை
பகல் முடிந்து இரவு எழவே இடைப்
பொழுது ஒரு நாழி அப்பொழுது
தூண் உடைத்து புலம் நடுங்க உறு
உறுவென அவன் உறுமி வந்தான்
தூண் உடைத்து புலம் நடுங்க உறு
உறுவென அவன் உறுமி வந்தான்
செருக்கேறி பிதற்றும் அரக்கன் முன்
நர உடலும் அரிமா தலையும் ஊன்
கிழிக்கும் வல்லெயிறும் நற நறவென
வள்ளுகிருடன் சீறி கோளரியாய் நின்றான்
தன் படை யாவும் அற்றற்று வீழ
தன் படை யாவும் அற்றற்று வீழ
கோடும் நுதிலும் சிதையக் கண்டான்
இவனே மாயன் அறமெனும் கூற்று
தன்னைக் கொல்ல நிற்க கண்டான்
அறமறுத்த இரணியன் ஆகம் அறுக்க
மனைப் படியில் மடி மிசை கிடத்தினான்
வல்லுடல் வள்ளுகிரால் வகிர்ந்து குருதிப் பட
சிவந்த முகமென அருளும் சிங்களே்குன்றமே
நான்முகனும் பிறை பித்தனும் முப்பத்து
மூவரும் நா தழுக்க வெரு கொண்டினரே
ஆர் கோட்ட தினை சிதை பெருமால் கேழல்
வகிர்ந்த சிம்மமாய் அரி நின்ற சிங்கவேள்குன்றமே
பத்தனை பேண ஆமருவி வந்தான்
தந்தையெனினும் அறம் தளிர தனையன்
நெறியுரை கேளா அவுணன் உடல் கீண்டான்
செஞ்சுமகள் துணை சேர தண்ணகம் கொண்டான்
தமிழ் மாநிலம் வடவெல்லை தண்முகில்
சூழ்வேங்கடம் அதன் வட குடக்கே
மருள் நீக்கி அருள பேழ்வாய் கோளரியாய்
தான் அமர்ந்த சிங்கவேள் குன்றமே
No comments:
Post a Comment