Sunday, May 18, 2014

துலுக்க நாச்சியார் இயல் ஒன்று

பாண்டிய நாட்டை சோழர்களிடமிருந்து மீட்டப் பின் தமிழகம் முழுவதும் பாண்டியர்களின் ஆட்சிக்கு கீழ் வந்தது. அதனை  முதலாம் சுந்தர பாண்டியனின் சிறப்பாக ஆட்சி செய்தான்,  அவனுக்கு பின் மாறவர்மன் குலசேகர பாண்டியன் நாற்பது ஆண்டுகளுக்கு சிறப்பாக ஆட்சி செய்தான். வடக்கே சாளுக்கியர்களை வீழ்த்தி ஹோய்சாளர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்தனர். அக்காலம் மூன்றாம் வீர பலால ஆண்டு கொண்டிருந்தான் அவன் தமிழகத்தையும் தனது ஆட்சிக்கு கீழ் கொண்டு வந்து விட வேண்டும் என்ற ஆசையினால் அடிக்கடி பாண்டிய நாட்டின் அரசியலில் தலையிட்டு குழப்பம் ஏற்படுத்த முயற்சித்து கொண்டிருந்தான் .பாண்டியர்கள் பொதுவாக ஒரு மன்னன் தலைநகரிலிருந்து ஆட்சி செய்ய, இளவரசர்கள் கூற்றம் என்னும் சித்ற்றரசுகளுக்கு பொறுப்பு வகித்தனர். அவ்வகையில் மூன்றாம் சுந்தர பாண்டியன் அரசனாக தலைநகரிலிருந்து ஆட்சி செய்யவும், இரண்டாம் வீர பாண்டியன் கொர்கையிளிருந்து ஆட்சி செய்யுமாறு முடிவு செய்தான் தந்தை குலசேகர பாண்டியன். இதனை துடுப்பாக எடுத்து சகோதிரர்களுக்குள்ளே  கலகம் ஏற்படுத்த காத்திருந்தான் வீர பலாளன்.

இவ்வாறென கதை தொடங்க பெறுகிறது.  அத்தியாயம் பாண்டியனின் கலை மண்டபத்தில் தொடங்குகிறது. நாம் காணவிருக்கும்  காட்சியானது, கலை மண்டபத்தில் நித்தம்  நித்தம் நடைப்பெறும் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சி.

 கலை மண்டபம் :

சிறப்பான ஆட்சி செய்யும் குலசேகரனின் அரசவையாகும். குலசேகர பாண்டியன் பல கலைகளை வளர்த்து சிறப்பு செய்து கொண்டிருந்தான். அவன் ஆட்சியில் வர்த்தகம் தலை சிறந்து விளங்கியது. சோழர்கள் கட்டி அமைத்த கோவில்கள் ஆனாலும், அதற்கும் மானியம் வழங்கி சிறப்பு செய்தான், பாண்டிய மன்னன். அவனது அவையில் நித்தமும் ஆடல் பாடல் என பல கலைஞர்கள் வந்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பரிசு பெற்று  செல்வது உண்டு. எனினும், அவன் அரசவையின் கணக்கரின் மகள்கலான நாயகி, மற்றும் ஹரிப்ரிய நித்தமும் ஆடி பாடி முடித்த  பின்னரே, மற்றவர்கள் தொடங்குவார்கள் . அவ்விதம் அவ்விருவரும் கலையில்  தேர்ச்சி பெற்றிருந்தனர் . அன்றைய தினம் ரங்கா நாயகி, முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியனை பற்றி தாண்டவ வடிவத்தில் பாடி  கொண்டிருந்தாள்,அதற்க்கு ஹரிப்ரிய அந்த உமையே தாண்டவம்  ஆடுவதை போல அடி கொண்டிருந்தாள்.  தமிழகத்தின் தலைச் சிறந்த அரசான சோழ பேரரசை நிறுவித்த இராச இராச சோழன், தமிழர்கள் தலை நிமிர்ந்து நிற்கும் வகையில் வானுயர்ந்த பெரிய கோவிலை கட்டினார். அவரின் மகனான இராசேந்திர சோழனோ  தென் இந்தியா மற்றும் வங்காளம் முழுவதும் அல்லது கடாரம், போன்ற தீவுகளையும் சொழன் பிராந்தியத்தில் சேர்த்தார். அவர்களுக்கு பின்  வந்த மன்னர்களின் திறம் சற்று  குறைய குறைய, பகையுடன் காத்திருந்த சடியவர்மன், சுந்தர பாண்டியன், சோழர்களுக்கு எதிரான  படை ஒன்றை  திரட்டி, அவர்களை வென்றான். பாண்டியர்களின்  வம்சத்தில்,சிவனுக்கு நிகராக போற்றப்படுபவர் சடையவர்மன்  என்றும்,திருமாலுக்கு இனையாக போற்றப்படுபவர் மாறவர்மன் என்றும் சிறப்பு பெயர்கள் கொண்டிருந்தனர். அவ்வகையில் சுந்தர பாண்டியன் சிவனுக்கு நிகராக போற்றப்பெற்றதால் சடையவர்மன் என்ற பெயருடன் முடிசூடப்பெற்றான். அவன் சேரர்களையும் வென்று மும்முடி பாண்டியன் என்று போற்றப்பெற்றான். அவனது மெய் கீர்தியைதான் அன்று ரங்கா நாயகி பாடி கொண்டிருந்தாள். அவள் பாடிய பாடல் பின் வருமாறு  மன்னனின் கலை மண்டபத்தில் மிக விமர்சையாக நிகழ்ந்து கொண்டிருந்தது .

போற்றி போற்றி ஈசா உன்னடி போற்றி
வெற்றி வெற்றி உன்னடி பணிந்திடும் வெற்றி

அடி வை அடி வை பகைத்தோர்  கொடி இறங்கிட வை
துருவங்கள் இரண்டிலும் மீன் கொடி பறந்திட செய்

தென்னாடுடைய சிவனே போற்றி போற்றி !!

பிறை கழற்றி சடைக் கலைந்து
தகதக  தகவென கண் சிவந்து
விறுவிறு விறுவென நான் புடைத்து
முறு முறுவென மீசை முறுக்கி

வீரத்தை வளைத்து வில்லென எடு
காற்றாய் பறந்திடும் அம்பினை தொடு
எதிர் நின்றவர் அஞ்சிட மேலதை விடு
கலி தாண்டவம் ஆடி என் அச்சத்தை சுடு

தடதட தடவென புரவிகள் புழுதினை பரப்பிட
இடிப்பட  பொடிப்பட தடைகளை தாக்கிட
முட்டிடு உருட்டிடு உருவங்கள் சிதைந்திட
மகிழ்ந்திடு நெகிழ்ந்திடு தோற்றவர் எதிர்ப்பட

தென்னாடுடைய சிவனே போற்றி போற்றி !!

இந்நிகழ்ச்சி நிகழ்ந்து கொண்டிருக்கும் வேலையில் ஒரு முக்கிய செய்தி அரசவைக்கு வருகிறது, கொண்டு வந்திருப்பவன் ஹோய்சால  நாட்டிலிருந்து வந்திருக்கும் தூதுவன்.அச்செய்தியை படித்ததும், அவசரமாக ஆலோசனை செய்ய  வேண்டும் என்று முதல் அமைச்சர் கூற, மன்னன் ஹரிப்ரியவின் ஆட்டம் முடிந்தவுடன், அவர்களின் ஆட்டத்தில்  தாம் மிகவும் மகிழ்ந்து மூழ்கிவிட்டதாக கூறி என்றும் இல்லாத அளவிற்கு  பொன்னும் பொருளும்  அல்லி வழங்கினான்.   அவளது தாண்டவ நடனத்தை  பார்க்கும் பொழுது அந்த உமையே ஆடினாலோ அல்லது சிவா பெருமானே பெண் உருக்கொண்டு ஆடினானோ என்று மெய் சிலிர்க்கும் விதம் இருந்தது  என்றான்.மேலும் ரங்கா நாயகியின் சிறப்பான பாடலினாலும் அவளது ஓங்கி ஒலித்த குரலினாலும் முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியனின் மெய் கீர்த்தி தன்னை தொட்டு பார்த்து விட்டது என்னை  வீழாதே என்றும் யார் தாலும் பணியாதே என்று அம்மாமன்னர் தன் முன் வந்து கூறியது போல இருந்தது என்றான். ஆன பொழுதும் அன்று பிற கலைஞர்களின் நிகழ்ச்சிகளை காணாமல் அரசவையை அவசரமாக கூட்டினான்.


No comments:

Post a Comment