Monday, March 10, 2014

விண்ணளந்தான் உலகம் அளந்தான்

விண்ணளந்தான்  உலகம் அளந்தான்
குமரிப் பருவத்து ஆயர் சிறுமியர்
நெஞ்சமெல்லாம் அளந்தான். வங்க
கடல் கடைந்தான் , கடைந்து முகர்ந்த
 நீரை மழையாக தரும் முகிலென
அருளினான் மாயவன் மன்னவன்
சீரிய சிங்கன் சுடராழி வலம்புரி
தரித்த நீலமேனி செவ்வாய் அழகன்
உம்பர்க்கெல்லாம்  கோமான் அன்பர்க்
எல்லாம் அடியவன் என சிறந்த
பெருமானே  வாழியே வாழியே !!

No comments:

Post a Comment