Sunday, August 24, 2014

இறுதியில் என் பயம் உடைக்கும் நாள் வந்து விட்டது. உன்னை சேரவே முடியாது என்று தெரிந்து விட்டது. மனம் தாங்க முடியாத வலி தான், இருந்தும் நான் செய்வதற்கு ஒன்றுமில்லை. ஏதேனும் அதிசயம் நிகழ்ந்து என்னை உன்னுடன் சேர்க்குமா என்று ஏங்குகிறேன். தேடி வந்து வரம் தந்தவள் நீ இனி தேடினாலும் கிடைக்க  போவதில்லை என்பதே உண்மை. இரு தரப்பில் உள்ள காதல்  மட்டும் புனிதமல்ல ஒரு தலையாய் நேசிப்பதும் புனிதம் தான். என் காதல் என்னுள் வளர்ந்த உயிர் அணுவாகும் அதற்கு உன்  மனதானது இடம் தராததால் அழிந்து விட போவதில்லை. ஏனெனில் அது அழிவற்றது. யாருடைய கதையும் வீழ்ந்த இடத்தில முடிவதில்லை, என் கதையும் இனி தொடரும் அதில் இனி வரப் போகும் நபர்கள் யாரோ யாவரோ ஆன போதும் உன் காதல் தந்த நினைவுகள் என் வாழ்வை   வழி நடத்தி செல்லும். எதுக்காக நான் உன்னை பாக்கணும் இப்போ மறக்க முடியாம  தவிக்கணும். அவல அவள பாக்காம இருந்திருக்கலாம்  இருந்திருக்கலாம்  ஐந்து நிமிடம் அவ கூட கூட வாழாம இருந்திருக்கலாம். எல்லாம்  நடந்தது இப்போ  வாழ்க்கைல அவ இல்ல இது மட்டும் ஏன் ?

No comments:

Post a Comment