Tuesday, October 14, 2014

வெட்டி வைத்த கட்டி வெண்ணிலவா
கட்டி இழுத்திடும் சொக்கு விழியா
எது எது என்னை இழுத்து நீ சொல்லடி

கண்ணை பார்த்து காதல் சொல்வேனா
மண்ணை பார்த்து தலை கவிழ்வேனா
எது எது எது நிகழ்ந்திடும் நீ சொல்லடி

ஐந்து நிமிடம் கூட இருந்தாய்
ஐம்பது வார்த்தை சொல்லி முடித்தாய்

எந்தன் மௌனம் களையும் முன்னே
வழிகள் அடைத்து விழி நனைத்தாய்

இது வரை தேடி  அலைந்தேனே
இன்று உன்னை கண்டு பிடித்தேனே
தேடும் பொருள் தானே வழி சொன்னதே

உயிருடன் உடல்  சேரும் முன்னே
காயம் பட்டு உடல் அழிவது ஏன்
உயிர் இனி வேறொரு உடல் தேடுமே

No comments:

Post a Comment