மலரோடு வண்டு கதைப் பேசுதே
மண்ணோடு மழையும் உறவாடுதே
என்னோடு நீயும் உறவாடவே
காத்திருக்கிறேன் கண்மணி
மண்ணோடு மழையும் உறவாடுதே
என்னோடு நீயும் உறவாடவே
காத்திருக்கிறேன் கண்மணி
கரைத் தேடி அலையும் நடைப்போடுதே
நுரையாக பேசி விடைப் பெறுகுதே
உன்னோடு நானும் உரையாடவே
காத்திருக்கிறேன் கண்மணி
நுரையாக பேசி விடைப் பெறுகுதே
உன்னோடு நானும் உரையாடவே
காத்திருக்கிறேன் கண்மணி
கனியோடு சுவையும் கலந்திருக்குதே
முள்ளோடு மலரும் இணைந்திருக்குதே
இரவோடு குளிரும் எனைத் தீண்டுதே
உனைத் தீண்ட ஏனடி இடைவெளி
முள்ளோடு மலரும் இணைந்திருக்குதே
இரவோடு குளிரும் எனைத் தீண்டுதே
உனைத் தீண்ட ஏனடி இடைவெளி
மனதுள்ளே காதல் கரைத் தாண்டுதே
உனைக் காண கண்கள் அலைகின்றதே
விழியோடு கனவும் உறவாடுதே
தலைவனே, காண வருகிறேன்
உனைக் காண கண்கள் அலைகின்றதே
விழியோடு கனவும் உறவாடுதே
தலைவனே, காண வருகிறேன்
மலர்கின்ற மாலைப் பொழுதானதே
இளங்காற்று தீண்ட உடல் வேகுதே
உனைக் கூடி களிக்க மனம் ஏங்குதே
தலைவனே, காண வருகிறேன்
இளங்காற்று தீண்ட உடல் வேகுதே
உனைக் கூடி களிக்க மனம் ஏங்குதே
தலைவனே, காண வருகிறேன்
No comments:
Post a Comment